Wednesday, April 18, 2012

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு



2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையின் கீழான வகைப்பாட்டில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டது. இந்நூலிற்கான சிறந்த நூலாசிரியர் பரிசுத் தொகை ரூபாய் முப்பதாயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகிஅயவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம்.சுப்பிரமணிக்கு வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் , வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என். ஆர். சிவபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழ்த்தாய் விருதினை மதுரை தமிழ்ச் சங்கத்திற்கும், உ.வே. சா விருதினை புலவர் செ. இராசுக்கும், கபிலர் விருதினை பேராசிரியர் அ.அ.மணவாளனுக்கும், ஔவையார் விருதினை திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கும் வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் “தமிழ் விக்கிப்பீடியா” நூலாசிரியர் தேனி எம்.சுப்பிரமணிக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்

2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் 27 தலைப்புகளிலான வகைப்பாட்டில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியர் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டதற்கான சிறந்த நூலாசிரியர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை ரூபாய் முப்பது ஆயிரத்துக்கான காசோலையையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தேனி எம்.சுப்பிரமணியிடம் வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்ட சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் பாராட்டுச் சான்றிதழையும் பரிசுத் தொகை ரூபாய் பத்து ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், திரையுலகப் பிரமுகரகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் செய்தி - மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர் முனைவர் மு. இராஜாராம் நன்றி தெரிவித்தார்.

முத்துக்கமலம் 15-04-2012



முத்துக்கமலம் இணைய இதழ் ஆறாம் ஆண்டில் பயணித்து வருகிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் ஆறாம் ஆண்டில் 22 வது இதழாக (முத்து: 6 கமலம்:22) 15-04-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....

1.தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது - நிகழ்வுகள்.

2. விநாயகர் திருவுருவங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.

3. சித்திரைப் புத்தாண்டு - உ. தாமரைச்செல்வி.கட்டுரை - பொது.

4. வலைப்பூக்கள் - 126 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

5. எது பாதுகாப்பு? - குட்டிக்கதை.

6. யானை எப்படி இருக்கும்? - குட்டிக்கதை.

7. சீனுவுக்கு என்ன பிரச்சனை? - தே. சுந்தர்ராஜ்.- கதை - சிறுகதை.

8. வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? - எல். துரைராஜ்.- கட்டுரை - எப்படி?

9. குறுங்கவிதைகள் - பாளை. சுசி. - கவிதை.

10. கொங்குச் சீமை...பெருமை! - முகில் தினகரன்.- கவிதை.

11. பெண்ணைப் பெருமைப்படுத்துவோம்! - முகில் தினகரன்.- கவிதை.

12. என்றாவது ஒருநாள் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

13. அந்த சில நிமிடங்கள் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

14. நிசப்தங்கள் நீங்குகின்றன! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

15. மரண அழைப்பு? - ப. மதியழகன்.- கவிதை.

16. சொல்ல முடியாமல்...! - ப. மதியழகன்.- கவிதை.

17. மனக்குதிரை - ப. மதியழகன்.- கவிதை.

18. மீனவன் வாழ்க்கை - ப. மதியழகன்.- கவிதை.

19. கணக்கு - ப. மதியழகன்.- கவிதை.

20. அடுத்தடுத்து - ப. மதியழகன்.- கவிதை.

21. மர்மம் - ப. மதியழகன்.- கவிதை.

22. கனவில் வந்த காலை! - மு.சந்திரசேகர்.- கவிதை.

23. எடுபடாத தத்துவம் - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

24. மலையேற்றத்தில் ஏமாற்றம் - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 13.

25. ஏமாற்றுக்காரர்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.17

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...

http://www.muthukamalam.com/

Sunday, April 1, 2012

முத்துக்கமலம் 01-04-2012



முத்துக்கமலம் இணைய இதழ் ஆறாம் ஆண்டில் பயணித்து வருகிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் ஆறாம் ஆண்டில் 21 வது இதழாக (முத்து: 6 கமலம்:21) 01-04-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....

1. சிவத் திருவுருவங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.

2. சங்க கால சோழநாட்டு ஊர்கள் - ப. செந்தில்குமாரி.- கட்டுரை - இலக்கியம்.

3. பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? - எல். துரைராஜ்.- கட்டுரை - எப்படி?

4. கொள்ளி - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.16

5. சங்க கால மலர்கள் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

6. வலைப்பூக்கள் - 125 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

7. நம்ம பொண்ணுக்கு டூ வீலர் வேணுமாம்...! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

8. யாருக்கு லாபம்? - தேனி. பொன். கணேஷ்.-சிறுவர் பகுதி - சம்பவங்கள்

9. யார் பெரியவர்? - குட்டிக்கதை.

10. அரசனின் தீர்ப்பு! - குட்டிக்கதை.

11. தீதும்….நன்றும்! - முகில் தினகரன்.- கதை.

12. மாமனோட மனசு! - முகில் தினகரன்.- கதை.

13. பாம்பாட்டி! - முகில் தினகரன்.- கதை.

14. எம் புருசன்தான்... - முகில் தினகரன்.- கதை.

15. கலையின் விலை? - முகில் தினகரன்.- கதை.

16. மீசை வைக்க ஆசை...? - முகில் தினகரன்.- கதை.

17. ராகிங்...? - முகில் தினகரன்.- கதை.

18. மோட்டலில் நடந்த கலாட்டா! - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 12.

19. திசைகள் - ப. மதியழகன்.- கவிதை.

20. அதீதம் - ப. மதியழகன்.- கவிதை.

21. வேறு! - ப. மதியழகன்.- கவிதை.

22. நம்பிக்கை - த.சத்யா.- கவிதை.

23. தேடல்கள் - த.சத்யா.- கவிதை.

24. நீயே என் கவிதையடி! - த.சத்யா.- கவிதை.

25. துளிப்பாக்கள் - பாளை.சுசி.- கவிதை.

26. இருளில் நான்! இதயத்தில் நீ! - மு.சந்திரசேகர்.- கவிதை.

27. கல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா? - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.

28. அமைதிப் ப(ய)ணம்! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

29. இனிக்கும் நினைவுகள் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

30. ஒரு நிறுவல்? - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

31. பேனா பேசிடும்…! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

32. காலத்தை வென்ற கற்பூரம் - ஜெயஸ்ரீ ஷங்கர்.- கவிதை.

33. பாழடைந்த கிணறு - ஆஷிகா.- கவிதை.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...

http://www.muthukamalam.com/